ETV Bharat / state

தேர்தல் அலுவலர்கள் இடமாற்றத்தை எதிர்த்து ஆர்.எஸ். பாரதி உயர் நீதிமன்றத்தில் மனு!

author img

By

Published : Mar 1, 2021, 1:10 PM IST

சென்னை: தேர்தல் அலுவலர்கள் இடமாற்றத்தை எதிர்த்து ஆர்.எஸ். பாரதி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஆர்.எஸ். பாரதி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்
ஆர்.எஸ். பாரதி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவதற்காக மாவட்ட தேர்தல் அலுவலர், தொகுதி தேர்தல் அலுவலர், உதவி தேர்தல் அலுவலர் ஆகியோரை கடந்த ஜனவரி 21ஆம் தேதி தேர்தல் ஆணையம் நியமித்தது.

ஆனால் தேர்தல் அலுவலர்களின் கைபேசி எண், வாட்ஸ் ஆப் எண், மின்னஞ்சல் போன்ற விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. இதுசம்பந்தமாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலருக்கு மனு அனுப்பியிருந்தோம்.

அந்த மனுவிற்கு பதிலளித்த தலைமைத் தேர்தல் அலுவலர், பொதுத்துறை இணையதளத்தில், 234 தொகுதிகளின் தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்களின் தொடர்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஆனால் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்த தேர்தல் அலுவலர்கள் தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசிக்காமல் உள்நோக்கத்துடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை இடமாற்றம் செய்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை பிறப்பித்த அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும். அந்த அறிவிப்பை ரத்து செய்து குறைகளை களைந்து புதிய அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும் என அவர் மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்விசாரணைக்கு வந்தது. அப்போது புதிய பட்டியல் இன்று (மார்ச்1) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதை சரிபார்க்கலாம். மூன்று ஆண்டுகளுக்கும் மேல் பதவி வகித்தவர்கள் பணிமாற்றம் செய்யப்படுவது உண்டு. அந்த வகையில் அவர்கள் பணிமாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, புதிய பட்டியலை சரிபார்க்க மனுதாரருக்கு அவகாசம் வழங்கிய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நாளை மறுநாளுக்கு (மார்ச் 3) தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: திமுக நடத்தும் மக்கள் கிராம சபை கூட்டங்களுக்கு தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவதற்காக மாவட்ட தேர்தல் அலுவலர், தொகுதி தேர்தல் அலுவலர், உதவி தேர்தல் அலுவலர் ஆகியோரை கடந்த ஜனவரி 21ஆம் தேதி தேர்தல் ஆணையம் நியமித்தது.

ஆனால் தேர்தல் அலுவலர்களின் கைபேசி எண், வாட்ஸ் ஆப் எண், மின்னஞ்சல் போன்ற விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. இதுசம்பந்தமாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலருக்கு மனு அனுப்பியிருந்தோம்.

அந்த மனுவிற்கு பதிலளித்த தலைமைத் தேர்தல் அலுவலர், பொதுத்துறை இணையதளத்தில், 234 தொகுதிகளின் தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்களின் தொடர்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஆனால் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்த தேர்தல் அலுவலர்கள் தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசிக்காமல் உள்நோக்கத்துடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை இடமாற்றம் செய்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை பிறப்பித்த அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும். அந்த அறிவிப்பை ரத்து செய்து குறைகளை களைந்து புதிய அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும் என அவர் மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்விசாரணைக்கு வந்தது. அப்போது புதிய பட்டியல் இன்று (மார்ச்1) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதை சரிபார்க்கலாம். மூன்று ஆண்டுகளுக்கும் மேல் பதவி வகித்தவர்கள் பணிமாற்றம் செய்யப்படுவது உண்டு. அந்த வகையில் அவர்கள் பணிமாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, புதிய பட்டியலை சரிபார்க்க மனுதாரருக்கு அவகாசம் வழங்கிய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நாளை மறுநாளுக்கு (மார்ச் 3) தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: திமுக நடத்தும் மக்கள் கிராம சபை கூட்டங்களுக்கு தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.